இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சீதனம் வேண்டும், சீதனம் இன்றி திருமணம் இல்லை

 *சீதனம் வேண்டும், சீதனம் இன்றி திருமணம் இல்லை* *தொடர்0️⃣4️⃣* #சீதனத்தால்_ஏற்படும்_கொடுமைகள். தலை தூக்கி, கொடிகட்டிப் பறக்கும் இந்த சீதனக்கொடுமை, இன்று சமுதாயத்தில் ஏற்படுத்தி இருக்கும் சீரழிவுகளையும் அவலங்களையும் நடுநிலை கண்ணோட்டத்தோடு சிந்திக்கும் எந்த ஒரு மனிதனும் நிச்சயமாக இதை வெறுத்தொதுக்குவான். 🔘 எவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்துக்கு முன்பு ஜாஹிலிய்யதுடைய காலத்தில் பெண் பிள்ளைகள் பிறந்தால் எவ்வாறு ஒரு அச்சம் ஏற்படுமோ, அவ்வாறு இன்று ஒரு பெண் குழந்தை பிறந்தால் பெற்றோர்களுக்கு ஒரு அச்சம் ஏற்படுகின்ற நிலைமை வந்துள்ளது. 🔘 ஒரு பெண் பிள்ளை பிறந்து விட்டால் ஒரு வயது இரண்டு வயதிலேயே அந்தப் பெண் பிள்ளைக்கான வீடு கட்டப்பட ஆரம்பிக்கின்றது. 🔘 தான் பெற்றெடுத்த பெண் மக்களை எப்படியும் மனக்கோளத்தில் காண வேண்டும் என்பதற்காக தன் மானத்தை துறந்து ஊர் ஊராக, தெருத்தெருவாக, வீடு வீடாக, ஏன் பள்ளிவாசல் பள்ளிவாசலாக கையேந்தி பிச்சை கேட்கும் பெற்றோர்கள் ஆயிரமாயிரம். 🔘 வட்டிக்கு கடன் வாங்கி, வரப்போகும் கணவனுக்கு சீதனமாக வாரிக் கொடுத்துவிட்டு, வாங்கிய கடனையும் வட்டியையும் செலுத்த...

சீதனம் வேண்டும், சீதனம் இன்றி திருமணம் இல்லை

*தொடர்* 03 *சீதனம் என்றால் என்ன? அன்பளிப்பாக விரும்பி கொடுத்தால் சீதனம் ஆகாதா?* اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ‌‌ ‌‏ (உண்மையான) விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ் (-அவன் பெயர் அவர்கள் முன்) கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும், மேலும், (இவ்வேதத்தை இறக்கி வைத்த) அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவை அவர்களுக்கு ஈமானை அதிகப்படுத்தும், அவர்கள் தங்கள் இரட்சகனின் மீது (தங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கையும் வைப்பார்கள். (அல்குர்ஆன் : 8:2) சீதனம் என்பது ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் முடிப்பதற்காக வேண்டி அந்தப் பெண் வீட்டாரிடம் கேட்டு பெற்றுக் கொள்வதே சீதனமாகும். அது பணமாக இருக்கலாம், வீடாக இருக்கலாம், அல்லது காணி பூமியாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அந்த பெண் வீட்டாரிடம் இருந்து கேட்டு பெற்றுக் கொள்வது சீதனமாகும். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதை யாவரும் அறிந்து விடயமே... இன்று எமது சமுதா...

சீதனம் வேண்டும், சீதனம் இன்றி திருமணம் இல்லை

*தொடர்* 0️⃣2️⃣ *வரதட்சணை தோன்றிய வரலாறு* சீதனம் எனும் கொடுமை இந்த சமுதாயத்தில் வேரூன்றி வளர்ந்து விட்டதற்கு காரணம் பெண்களைப் ஈன்றெடுத்த பெற்றோர்களே...!  ஆம்! ஒரு காலத்தில் சீதனம் என்ற வார்த்தையை தெரியாமல் தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது தங்கள் மகளைத் திருமணம் முடித்துக் கொடுக்கும் போது பணம் படைத்த சிலர் தங்களது கௌரவத்தை வெளிக்காட்டுவதற்காக, புகுந்த வீட்டிலே தன் மகள் கண்ணியமாக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அவனை துணைவியாக ஏற்றுக் கொள்ளும் மணமகன் அவள் மீது அதிக பிரியம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதற்காக, திருமணம் முடித்து கணவன் வீட்டுக்கு செல்லும்போது அவளுக்குத் தேவையான, அவள் கணவனுக்கு தேவையான பொருட்களை கொடுத்து அனுப்பும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தனர்.  ஒருவரைப் பார்த்து மற்றவர், மற்றவரை பார்த்து அடுத்தவர் என்ற இந்த பழக்கம் நாளுக்கு நாள் காட்டுத் தீ போல் மக்களுக்கு மத்தியில் பரவ ஆரம்பித்தது. அது மாத்திரமின்றி தன் மகள் கண்ணியமானவன், கௌரவமானவல், என் மகள் அடுத்தவனின் வீட்டில் போய் இருப்பதா என்ற கருவம் மேலோங்கி தன் பிள்ளைகளுக்கு தேவையான வீடுகளை கட்டிக் கொடுத்தார்கள...

சீதனம் வேண்டும், சீதனம் இன்றி திருமணம் இல்லை

*தொடர்*0️⃣1️⃣ அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ். எமது சமுதாயத்தில் எத்தனையோ பாவங்கள் நடந்தேறிக் கொண்டிருந்தாலும் அதிலும் குறிப்பாக சொல்வதாக இருந்தால் சீதனம் என்று சொல்லக்கூடிய ஒரு பெரும் பாவம் இன்று தலை தூக்கி இருக்கின்றது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சொல்வதாக இருந்தால் சொல்லி முடிக்க இயலாத அளவுக்கு பெரும் பாதிப்புக்கு ஏழை மக்களாக இருக்கலாம் நடுத்தர மக்களாக இருக்கலாம் அனைவரும் இந்த வலையில் சிக்கித் தவிக்கின்றார்கள்.  இருப்பினும் நல்லுணர்வு கொண்டோர்களுக்கு ஓரிரு எடுத்துக்காட்டுகளே போதுமானதாகும் என்ற எண்ணத்தில் *சீதனம்* பற்றிய ஒரு சில விஷயங்களை உமக்கு கூறலாம் என நினைக்கின்றேன். இதை படிக்கும் அனைவருக்கும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நல்ல விஷயங்களை கொண்டு நடக்கும் பாக்கியத்தையும், வரதட்சணை எனும் கொடுமையை முழுமையாக ஒழிக்கும் பாக்கியத்தையும் ஏக வல்ல நாயன் அருள் புரிவானாக.... சீதனம் பற்றி கூறுவதற்கு முன் மஹர் என்றால் என்ன? மஹருடைய சட்டம் என்ன? என்பவற்றை கூறுவது பொருத்தம் என நினைக்கின்றேன். وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً‌    நீங்கள் (...